இதில் ஜனார்த்தனரெட்டி, ஒபலாபுரா மைனிங் கம்பெனி நிர்வாக செயலதிகாரி பி.வி.சீனிவாசரெட்டி, ஆந்திரா மாநில சுரங்கம் மற்றும் நில அறிவியல் துறை முன்னாள் இயக்குனர் வி.டி.ராஜகோபால், கர்நாடக மாநில முன்னாள் சுரங்கத்துறை இயக்குனர் கே.மேபாஜ் அலி ஆகியோரை குற்றவாளிகள் என்று உறுதி செய்ததுடன் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
ஜனார்த்தனரெட்டி உள்பட 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் ஜனார்த்தனரெட்டியின் எம்எல்ஏ பதவி பறி போய் உள்ளது.
The post ரூ.844 கோடி முறைகேடு புகாரில் கர்நாடக பாஜ எம்எல்ஏ ஜனார்த்தனரெட்டிக்கு 7 ஆண்டு சிறை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.