மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்த ராஜா தண்ணீரில் தத்தளித்தார். மருமகனை காப்பாற்ற ராஜம்மாளும் கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள், கல் திட்டை பிடித்து கொண்டிருந்த மகேஸ்வரியை பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி ராஜம்மாள், ராஜாவின் உடல்களை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கிணற்றில் தவறி விழுந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர், தாய் பரிதாபச் சாவு appeared first on Dinakaran.
