தொடர்ந்து, திமுக கூட்டணியில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தங்களுக்கு கிடைக்காது என கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘சிரித்துக்கொண்டே நல்லதுதானே. யார் சொன்னார்கள்.நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன். என்னை கேபினட் மந்திரியாக்க விபிசிங் ஆசைப்பட்டபோது நான் ஏற்கவில்லை. வாஜ்பாய் கேபினட் அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தபோதும் ஏற்கவில்லை. மீண்டும் அத்வானியும், அடல் பிகாரி வாஜ்பாயும் எனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுப்பதாக நிர்பந்தப்படுத்தினார்கள். அதையும் ஏற்கவில்லை. கட்சியில் இருந்த மற்ற எம்.பி.க்களுக்கு அமைச்சர் பொறுப்பை பெற்றுக் கொடுத்தவன் நான்’ என்றார்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு திமுக பயப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ, ‘பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை வைத்து ஒன்றிய அரசு அத்துமீறி செயல்படுகிறது. இதனால் அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. திமுகவில் யாரும் இதைப் பற்றி பயப்படவில்லை. அஞ்சவும் இல்லை. ஒன்றிய அமைப்புகளை இப்படி பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு கேடு’ என்றார்.
The post ஈ.டி, ஐ.டி.யை வைத்து ஒன்றிய அரசு அத்துமீறல் பயம் என்பது திமுகவின் அகராதியிலேயே கிடையாது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.
