இந்த நிபந்தனையை கருத்தில் கொண்டு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 5.9.2024-ன்படி வெளியிட்ட அரசாணையின்படி 6% சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று (3ம் தேதி) வெளிவந்த ஒரு நாளிதழில் “எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக” வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் சொத்து வரி உயர்வா? அரசு விளக்கம் appeared first on Dinakaran.
