அதில், 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 9 வழக்குகளில் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. மற்ற வழக்குகளில் காவல்துறை விசாரணையை முடித்து இறுதி விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை செய்து மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 13 சாட்சிகளிடம் இதுவரை சென்னை மகிளா நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது. ஞானசேகரன் மீதான அனைத்து வழக்குளிலும் காவல்துறை விசாரணையை நிறைவு செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்ற தேவையில்லை: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை appeared first on Dinakaran.
