திருத்துறைப்பூண்டியில் சுதந்திர போராட்ட தியாகி; தியாகி.பி.சீனிவாசராவ் 118-வது பிறந்த நாள் விழா

திருத்துறைப்பூண்டி, ஏப். 11: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் 118-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்க்கு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு மண்டபத்தில் அவரது 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

சுதந்திரபோராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவப்படத்திற்க்கு திருவாரூர் மாவட்டஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்,

நிகழ்ச்சியில் நகர்மன்றத்தலைவர் கவிதா பாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், நகராட்சி ஆணையர் துர்கா, வட்டாட்சியர் பரமேஸ்வரி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் சுதந்திர போராட்ட தியாகி; தியாகி.பி.சீனிவாசராவ் 118-வது பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: