கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் அவர்கள் ஒதுக்கிய ஒட்டுமொத்த நிதி ரூ.36,785 கோடி. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு உயர் கல்வித்துறைக்கு வழங்கிய நிதி ரூ.34,710 கோடி. அதாவது 10 ஆண்டுகளில் ரூ.37 ஆயிரம் கோடி. இந்த 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி. கடந்த ஆட்சியில் கல்லூரிகள் 40, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் 19 ஆக மொத்தம் 59 கல்லூரிகள். ஆனால், இந்த 5 ஆண்டுகளில் 21 கல்லூரிகள், கூட்டுறவுத் துறையில் 1 கல்லூரி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையில் 4 கல்லூரிகள், இந்த ஆண்டு 11 கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளை இந்த அரசு திறந்திருக்கிறது என்று சொன்னால், நிதிச் சுமையிலும் புதிய கல்லூரிகளை தந்தவர் முதல்வர்.
The post ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கில் வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம்தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு appeared first on Dinakaran.
