கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
* மதுரை கோட்ட ரயில்வே காலிப்பணியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.
* விருதுநகர்-செங்கோட்டை இடையே அகல ரயில்பாதை பணியின்போது கரிவலம் வந்த நல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய 2 ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதில், கரிவலம்வந்த நல்லூர் ரயில்நிலையத்தை செயல்படுத்த வேண்டும்.
* திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரயில் பாதை பணி நிறைவடைந்துள்ள நிலையில், கோவில்பட்டி – திண்டுக்கல் இடையே 4 ஜோடி மெமு ரயில்களை இயக்க வேண்டும். இது சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடைரோடு ஆகிய முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கும் என்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பயனடைவர்.
* மதுரை-கோவை இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவில் அகல பாதை பணிக்கு ரயில்வே துறை சுமார் ரூ.750 கோடி செலவிட்டது. ஆனால், இந்தப் பிரிவில் ஒரே ஒரு ரயில் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. மீட்டர் கேஜ் பாதையின்போது மதுரை-கோவை இடையே 5 ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே, ராமேஸ்வரம் மற்றும் செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக கோயம்புத்தூருக்கு கூடுதல் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எம்பிக்கள் வலியுறுத்தினார். கூட்டத்தில், மதுரை கோட்ட ரயில்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
The post காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை தமிழ்நாட்டுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்தல்; குழு ஒருங்கிணைப்பாளராக வைகோ தேர்வு appeared first on Dinakaran.