கடமலைக்குண்டு அருகே வாலிபர், மூதாட்டியை தாக்கியவர் கைது

வருசநாடு, ஏப்.23: கடமலைக்குண்டு அருகே, முன் விரோதம் காரணமாக வாலிபர் மற்றும் மூதாட்டியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (28). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த நித்திஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு, ஜெயசூர்யா தனது வீட்டின் முன்பு உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நித்திஷ், கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஜெயசூர்யா மற்றும் அவரது பாட்டி பேச்சியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஜெயசூர்யா அளித்த புகாரின் அடிப்படையில், கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து நித்திஷை கைது செய்தனர்.

The post கடமலைக்குண்டு அருகே வாலிபர், மூதாட்டியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: