×

ரூ.23 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம், ஏப்.22: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், குடிமேனஅள்ளி, தட்ரஅள்ளி, செல்லம்பட்டி, அகரம், நாகரசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில், சுமார் 1.75 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தேங்காய் அளவை பொறுத்து ரூ.16 முதல் ரூ.27 வரை விற்பனை நடந்தது. நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ.23 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்தது. தேங்காய் விலை, கடந்த வாரத்தை காட்டிலும் சற்று அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.23 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Kaveripatnam ,Parur ,Arasampatti ,Pannandur ,Kudimenalli ,Thattralli ,Chellampatti ,Agaram ,Nagarasampatti ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை