×

உத்திரமேரூரில் தீ தொண்டு வாரம் அனுசரிப்பு

உத்திரமேரூர், ஏப்.18: உத்திரமேரூர் தீயணைப்பு துறை சார்பில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வாரம் தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இதில், முக்கிய நிகழ்வாக நேற்று உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்துகொண்டு, தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வின்போது, உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன், நிலைய எழுத்தர் ஜீவா உட்பட தீயணைப்பு படை வீரர்கள் பலர் உடன் இருந்தனர்.

The post உத்திரமேரூரில் தீ தொண்டு வாரம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : charity week ,Uttaramur ,Uthramarur ,Uttaramur Fire Department ,Fire Charity Week ,Uttaramore ,
× RELATED உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில்...