* கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், தரங்கம்பாடி கோட்டை ஆகியவற்றில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்படும்.
* தமிழ்மொழியின் தொன்மையையும், பண்டைய தமிழ்நாடு் அரசியல், சமூக பொருளாதார வரலாற்றைப் பறைசாற்றுகின்ற கல்வெட்டுகளை காலவாரியாக தொகுத்து ‘கல்வெட்டு அருங்காட்சியகம்’ மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.
* நிலவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியில் தினை நிலவரைபடம் உருவாக்கும் திட்டம் ரூ.12 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் ‘சுவடியியல்’ என்னும் ஓராண்டு பட்டப்படிப்பு ரூ.31 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
* தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கி வரும் கல்வி பயிலுதவித் தொகை ரூ.6000ல-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாதுகாக்கப்பட்டவையாக 12 வரலாற்று சின்னங்கள் அறிவிக்கப்படும்: ‘சுவடியியல்’ ஓராண்டு பட்டப்படிப்பு அறிமுகம்; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.