தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி துறை, மனிதவள மேலாண்மைத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதில் அளித்து பேசி, துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் பேச்சுக்கு பதில் அளித்து சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பதில் அளித்து பேசி, துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
The post பேரவையில் இன்று… appeared first on Dinakaran.