விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி..!!

கோவை: கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்களுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விசைத்தறி உரிமையாளர்களுடன் கோவை ஆட்சியர், மண்டல தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினர். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்கள் 30% கூலி உயர்வு வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். 5% மட்டுமே கூலி உயர்வு தர முடியும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலைநிறுத்தம் தொடரும் என விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்தனர்.

The post விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி..!! appeared first on Dinakaran.

Related Stories: