கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை..!!

கோவை: கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூலி உயர்வு கோரி கடந்த 5 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. விசைத்தறி உரிமையாளர்களுடன் கோவை ஆட்சியர், மண்டல தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் பேசி வருகின்றனர்.

The post கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Related Stories: