இந்நிலையில் நேற்று அன்னா லெஷ்னேவா திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். தனது மகன் சிறு காயத்துடன் உயிர் பிழைத்ததால் ஏழுமலையானுக்கு மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினார். தொடர்ந்து, இன்று காலை ஏழுமலையானை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற உள்ளார். அன்னா லெஷ்னேவா கிறிஸ்தவர் என்பதால், ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு தலைமுடி காணிக்கை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post திருப்பதி கோயிலில் தலைமுடி காணிக்கை செலுத்திய பவன்கல்யாண் மனைவி appeared first on Dinakaran.