கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை எழுதியிருந்தார். சில தினங்களுக்கு முன் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இத்தேர்வில் கதிர்செல்வி மாநில அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அக்கிராம மக்கள் மட்டுமின்றி சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ேடார் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் சாதனை மாணவி கதிர்செல்வியை பாராட்டி வருகின்றனர். மாணவி கதிர் செல்வி கூறுகையில், ‘கடின உழைப்புடன், தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நம்மை தேடி வரும். நான் தேர்வில் சாதனை படைத்ததற்கு காரணம் பல்வேறு செய்முறை தேர்வுகளை தொடர்ந்து எழுதியதுதான்’ என்றார்.
The post டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் முதல் இடம் பிடித்து விவசாயி மகள் சாதனை appeared first on Dinakaran.