அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு; ஞானசேகரனின் தம்பி உள்பட 3 பேர் கைது: போலி நகை அடகு மோசடியில் சிக்கினர்

புதுச்சேரி: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் தொடர்புடைய ஞானசேகரனின் தம்பி உள்பட 3 பேர், போலி நகை அடகு மோசடியில் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி முதலியார்பேட்டை மற்றும் வில்லியனூரில் உள்ள அடகு கடையில் போலியான நகைகளை அடகு வைத்து ரூ.1.60 லட்சம் மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது. அதன்பேரில் முதலியார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டது சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் (எ) லால் (28) மற்றும் ஷேக் இஸ்மாயில் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் ரூ.1.20 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் தம்பி என்பது தெரியவந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு; ஞானசேகரனின் தம்பி உள்பட 3 பேர் கைது: போலி நகை அடகு மோசடியில் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: