இந்த விபத்துக்கு காரணமாக இருந்த 14 வயது சிறுவன் மற்றும் அவரிடம் அலட்சியமாக சாவியை கொடுத்த அவரது தந்தை சாம் மீது வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மகாலிங்கம் என்பவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கானது விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தற்போது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கை மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னை வடபழனியில் சிறுவன் காரை ஒட்டி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.