குலசேகரம், ஏப். 10: குலசேகரம் எஸ்.ஐ. சேவியர் பிராங்கிளின் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தினர். பின்னர் சந்தேகத்தின்பேரில் டெம்போவில் சோதனை நடத்தினர்.
அதில் எந்தவித அனுமதியும் இன்றி சுமார் ஒரு யூனிட் செம்மண் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செம்மண்ணுடன் டெம்போவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த குலசேகரம் அருகே தும்பகோடு நந்தவனத்துவிளை வீடு பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் குமார் (43) என்பவரை கைது செய்தனர்.
The post குலசேகரம் அருகே மண் கடத்திய டெம்போ பறிமுதல் appeared first on Dinakaran.
