அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், எம்.கார்த்திகேயன், ஜி.கணேசன், எம்.வெற்றிச் செல்வன், எஸ்.அருண் ரவீந்திரா டேனியல், டி.ஆல்பர்ட் தினகரன், எஸ் ஜெயராஜ் குமார், சி.பழனி, எஸ்.லோகநாதன்,டி.பிரபு, அனுராத ரமேஷ் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அமலாக்கத் துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஏப்ரல் 9ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அசோக்குமார் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
அதன்படி நேற்று இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜாரகினர். அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், என்.பரணிகுமார் ஆஜராகினர். அமலாக்கதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றபத்திரிகையில் சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளது. இதனை சிடியில் தருவதாக கூறினார்.
இதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மின்னனு ஆவணமாக இல்லாமல் காகித வடிவில் வழங்க வேண்டும். அப்போது தான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் உறுதி தன்மை நிலை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், புதிய சட்டத்தின் அடிப்படையில் மின்னனு முறையில் ஆவணங்கள் வழங்கலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வரும் 20 தேதிக்குள் தலா 2 லட்சம் ரூபாய்கான ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் உள்பட 12 பேர் ஆஜர்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.