சென்னை: புது டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு முடிந்த 2வது கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் 74 பதக்கங்ககளை தமிழ்நாட்டின் 62 வீரர், வீராங்கனைகள் வென்றனர். இவர்களை பாராடி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாார்பில் ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கு பதக்கம் வென்றவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகள் வழங்கி பாராட்டினார்.
அத்துடன் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து இந்தோனேசியாவில் இம்மாதம் நடைபெற உள்ள ‘ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச்’ போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தர்ஷனாவுக்கு 90ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சீனாவில் நடைபெறவுள்ள ‘ஆசிய மலையேற்ற சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில்’ பங்கேற்கவுள்ள சைக்ளிங் வீராங்கனைகள் ரமணி, சவுபர்ணிகா ஆகியோருக்கு தலா 50ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.
கூடவே அவர்களுக்கு 7.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன சைக்கிள்களையும் அளித்தார். மேலும் தடகள வீரர் மாரி ஆனந்த் அவர்களுக்கு 1.6 லட்ச ரூபாய் மதிப்பிலான போல் வால்ட் உபகரணத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, துணை தலைவர்கள் திரு. என். ராமசந்திரன், டாக்டர். அசோக் சிகாமணி, பாரா தடகள வீரர் ரமேஷ் ஷண்முகம், பாரா தடகள வீராங்கனை கீர்த்திகா ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
The post தேசிய பாரா போட்டி; பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை : துணைமுதல்வர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.