பைக் மோதி காயம் அடைந்த முதியவரின் ரூ.40,000 மகளிடம் ஒப்படைப்பு


அண்ணாநகர்: சென்னை அயனாவரம் பச்சைக்கிளி வீராசாமி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (80). இவர் கடந்த 7ம்தேதி அண்ணாநகர் காவல் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி படுகாயம் அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து போலீசார் வந்து விசாரித்தபோது முதியவர் வைத்திருந்த பையில் 40 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதன்பிறகு போக்குவரத்து போலீசார், முதியவரின் விலாசத்துக்கு சென்று விசாரணை செய்து அவரின் மகள் முனியம்மாள்(57) என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து முதியவர் மீது பைக் மோதி விபத்து ஏற்படுத்திய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத்(24) என்பவரை தேடி வருகின்றனர்.

The post பைக் மோதி காயம் அடைந்த முதியவரின் ரூ.40,000 மகளிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: