கும்பாபிஷேக நிதி முறைகேடு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருநாகேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக நிதி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விசாரணையை ஐகோர்ட் கண்காணித்து அவ்வப்போது உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும். எதிர்காலத்தில் வேறு எந்த கோயிலிலும் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post கும்பாபிஷேக நிதி முறைகேடு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: