நண்பருக்கு பிறந்தநாள் பேனர் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. அவரது மகன் தனுஷ்குமார் (17). பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இவரது நண்பரின் பிறந்த நாள் விழாவுக்காக பேனர் வைக்க, அண்ணா நகர் 5வது தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் ராஜா என்பவரது மகன் 8ம் வகுப்பு மாணவரான லோகேஷ்வரன் (13) மற்றும் சில நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.

திருவண்ணாமலை – மணலூர்பேட்டை சாலையில் தனியார் காஸ் ஏஜென்சி அருகே சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே, இரவு 11 மணியளவில் ேபனரை அமைத்துள்ளனர். அப்போது, பேனரில் பொருத்தியிருந்த இரும்பு சட்டம், டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் உயர்மின் கம்பியில் உரசியது. இதனால், தனுஷ்குமாரும், லோகேஷ்வரனும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.

The post நண்பருக்கு பிறந்தநாள் பேனர் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: