ஏப்.14ம் தேதி திருச்செந்தூரில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர்கோயில் இணை ஆணையாளர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சித்திரை முதல் தேதி தமிழ் வருடப்பிறப்பையொட்டி ஏப்.14ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீர்த்தவாரி, உச்சிக்கால அபிஷேகம் நடைபெறும்.

காலை 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம் மற்றும் மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, மற்ற கால பூஜைகளும் நடைபெறும். கோயில் வளாகத்தில் அன்று காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஏப்.14ம் தேதி திருச்செந்தூரில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு appeared first on Dinakaran.

Related Stories: