மக்களின் பொதுநலனுக்கு எதிராகவும் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதல்படி, நகை திருப்பும்போது முழுத்தொகையும் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், ஏழை மக்கள் நகைகளை இழக்கும் நிலை ஏற்படும். மேலும், ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக்கடன்களை பெற முடியும். நகர்ப்புறங்களில் ஒரு கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7500 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது. எனவே, தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது; செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
The post ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் சுற்றறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு: தலைமை பொதுமேலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.