நத்தம், ஏப். 3: தென்காசியிலிருந்து நெல் உமி மூட்டைகளை ஏற்றி கொண்டு நத்தத்துக்கு லாரி ஒன்று கிளம்பியது. லாரியை விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த கனகராஜ் (50) என்பவர் ஓட்டி வந்தார். நத்தம் அம்மன்குளம் அருகே உள்ள எடை போடும் நிலையத்தில் சரக்கை எடை போட்டுவிட்டு லாரியை டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் கான்கிரீட் சிலாப் மீது லாரி ஏறியுள்ளது. இதில் எடை தாங்காமல் சிமெண்ட் சிலாப் உடைந்து நொறுங்கியதில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் டிரைவர் கனகராஜ் மற்றும் மாற்று டிரைவரான தென்காசி முத்துமலைபுரத்தை சேர்ந்த செல்வகுமார் (30) ஆகியோர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின் இருவரும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நத்தத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: இரண்டு பேர் காயம் appeared first on Dinakaran.
