மதுரை காமராஜர் பல்கலை.யில் மூத்த பேராசிரியரை துணை வேந்தராக நியமிக்க வேண்டும்: செனட் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம், மார்ச் 30:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்கள் குழு கூட்டம், பல்கலைக்கழக மு.வ.அரங்கில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக கலை மற்றும் அறிவியல் பின்புலம் உள்ள பேராசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என பேராசிரியர் வேளாங்கண்ணி ஜோசப், தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரி இணைப் பேராசிரியர் எம்.சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து துணை வேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழக கன்வீனர் குழு தலைவர் சுந்தரவல்லி, பதிவாளர் (பொ) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மதுரை காமராஜர் பல்கலை.யில் மூத்த பேராசிரியரை துணை வேந்தராக நியமிக்க வேண்டும்: செனட் கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: