கெமிக்கல் என்பதால் வெடி சத்தத்துடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் ரூ. பலகோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. அதேநேரத்தில் அந்த அறையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செய்யாறு சிப்காட்டில் உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ: ரூ.பல கோடி பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.