கேடிசி நகர் மார்ச் 29: தென்காசி இடைகால் துரைச்சாமியாபுரம் காலனி தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் குருசாமி (26). இவருக்கு சுமா என்ற மனைவியும், மகிழன்(2) குழந்தையும் உள்ளனர். குருசாமி ஜேசிபி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த குருசாமி கடந்த 21ம்தேதி விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தென்காசி அருகே ஜேசிபி டிரைவர் விஷம் குடித்து சாவு appeared first on Dinakaran.
