கூடங்குளம்: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் முத்தையா (42). இவர் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று காலை பைக்கில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். காலை 8 மணியளவில் கூடங்குளம் மேற்கு பைபாஸ் சாலையில் சென்றபோது, அணுமின் நிலையத்தில் பணி முடிந்து வந்த ஒப்பந்த ஊழியரான பெனிட் (25) என்பவரின் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த முத்தையா, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பெனிட் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post பைக்குகள் மோதல் ஏட்டு பரிதாப பலி appeared first on Dinakaran.