இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரையும், கடந்த பிப்ரவரி மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 7 பேரையும், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் 7 பேருக்கும், சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: