இந்நிலையில், வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திர் கூறியதாவது; வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31ம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை (107°F மேலாக) பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது; வேலூர் நகரில் இன்றோ நாளையோ வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் கடலோர பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். 4 மாவட்டங்களிலும் வெப்பநிலை இன்று 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் வெப்பநிலை இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் கோவையில் வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
The post மக்கள் தேவையின்றி வெளியில் போக வேண்டாம்.. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சதத்தை தாண்டும்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.