இதற்காக தமிழக அரசு ரூ.120 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த காலத்தை விட தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 25% அதிகமாகியுள்ளது. இதற்கு நாங்கள் செய்துள்ள கூடுதல் ஏற்பாடுகள்தான் காரணம். திருச்செந்தூர் கோயில் திருப்பதிக்கு இணையாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர் வானதி சீனிவாசன் பழனி கோயிலுக்கு சென்று பாருங்கள். வானதி சீனிவாசன் பேசும்போது, இறந்து போன பக்தர்களுக்கு நிதி உதவி கேட்பார் என எதிர்பார்த்தேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பே முதல்வர் என்னை அழைத்து அவர்களுக்கு நிதி உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் திருவண்ணாமலை கோயில் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பது உறுப்பினருக்கு நன்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post உடல்நலம் பாதிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.