இந்நிலையில் ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், கடந்த ஜனவரி மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு திறக்காததால், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் எழுதினர்.
இதனையடுத்து, தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று காலை 11.45 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், இந்த தண்ணீர் படிப்படியாக கூடுதலாக திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்ரல் மாதம் திறப்பதாக இருந்த கிருஷ்ணா தண்ணீர் மார்ச் மாதமே திறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
The post கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.