அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கை நடத்தலாம்: ஏப்.1ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி போட்டியிட்டார். அப்போது, அவர் தனது பிரமாண பத்திரத்தில் சொத்துகளை மறைத்து தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் திருப்பத்தூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு திருப்பத்தூர் ஜேஎம் 1 நீதிபதி மகாலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் நந்தகுமார் மற்றும் கே.சி.வீரமணியின் வழக்கறிஞர் ஜான்சக்தி ஆகியோர் ஆஜராகி, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார். அரசு தரப்பு வழக்கறிஞர் நந்தகுமார், தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மகாலட்சுமி, கே.சி.வீரமணி மீதான புகாரில் வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது. இந்த வழக்கை நடத்த உயர்நீதிமன்றமும் கூறியுள்ளது. அதனால் இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்று நடத்தும். விசாரணை வரும் 1ம் தேதி நடக்கும். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கை நடத்தலாம்: ஏப்.1ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: