வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடு மண்ணால் ஆன பதக்கம் மற்றும் இரும்பு கிட்டியது

விருதுநகர்: விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும் இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

The post வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடு மண்ணால் ஆன பதக்கம் மற்றும் இரும்பு கிட்டியது appeared first on Dinakaran.

Related Stories: