புதுச்சேரியில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் கட்டாயம் வைக்க வேண்டும் என்றும், அரசு அழைப்பிதழில் தமிழ் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று சட்டபேரவையில் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் தங்களது பெயர் பலகைகளில் தமிழ் பெயர் அதிகம் இல்லை. கட்டாயம் வைக்க வேண்டும் என உறுப்பினர் நேரு இன்று சட்டப்பேரவையில் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம். நிச்சயமாக கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பெயர் பலகையில் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றும் தமிழ் நமது உணர்வு என்றும் இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி வியாபாரிகள் தங்களது கடை பெயரை கட்டாயம் தமிழில் வைக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

இதை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் பல பகுதிகளில் காணப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பெயர் பலகைகள் சரி செய்யவில்லை என்றால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post புதுச்சேரியில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: