சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படும்: கோவை மாநகராட்சி எச்சரிக்கை

கோவை: சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகாலமாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாநகராட்சியின் புல்லுக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண் மற்றும் அவரது 5 மாத குழந்தையை மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், புல்லுக்காடு பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை கோவை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று கோசாலையில் அடைத்தனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படும்: கோவை மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: