முக்கிய குடி நீராதாரங்களாக உள்ள அம்மக்கல், ஊசிமலை, அப்புனாய், ஒசாட்டி, கட்லாடா நீர் தேக்கங்களில் நீர் வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
கிண்ணக்கொரை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள கெத்தை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதனால் கெத்தை அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதேபோல் தொட்டஹள்ளா, பிகுளி ஆறுகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத் தோடுவதால் குந்தா அணையின் நீர் மட்டமும் பெருமளவு உயர்ந்துள்ளது.
The post மஞ்சூர் பகுதியில் கன மழை எதிரொலி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.
