தேன்கனிக்கோட்டை, மார்ச் 14: தேன்கனிக்கோட்டை எஸ்எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் குந்துக்கோட்டை கிராமம் அருகே ரோந்து சென்றபோது, வனத்துறை சோதனைசாவடி அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அஞ்செட்டி ராமர்கோயில் பகுதியை திரூமூர்த்தி(28), தேவன்தொட்டி கிராமம் வேணுகோபால்(28), ருத்ரோஜிராவ்(35) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த ₹22 ஆயிரம் ரொக்கம், 4 டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும் சாலிவாரம் கிராமம் அறுமுகம்(37), கெலமங்கலம் சீனிவாசன்(46) ஆகிய இருவரை ஜாமினில் விடுவித்தனர்.
The post சூதாடிய 3 பேர் கைது ₹22 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.
