ஆர்என் ரவி ஒரே தேசம், ஒரே மொழி என்கிற ஆர்எஸ்எஸ் அஜண்டாவை செயல்படுத்துவதற்காக இப்படி பேசி வருகிறார். தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் இந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை உருவாக்குவது, இந்திக்குப்பிறகு சமஸ்கிருதமே ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விவரமானவர்கள், விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்.என்.ரவியின் மாயாஜால பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள் ஏமாற மாட்டார்கள். விசிக எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம். விசிக தொண்டர்களை தேர்தல் பணியாற்ற ஊக்கப்படுத்துகிறோம். வி.சி.க இல்லாமல் இங்கு அரசியல் காய்களை யாரும் நகர்த்த முடியாது என்கிற நம்பிக்கையை தொண்டர்களிடம் ஊட்டியுள்ளோம்” என்றார்.
The post ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுக்கு தமிழக மக்கள் இணங்க மாட்டார்கள்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.
