தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், இந்த நிலத்திற்கு மாதம் ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாதத்திற்கு 1.93 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார். கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இந்து சமய அறநிலைய துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகி, ‘சோமநாத சாமி கோயில் நிலம் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி தொடங்க கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தை குத்தகைக்கு விட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.
