இதற்கு பூண்டி ஏரி நிரம்பியதால், அங்கிருந்து நாள்தோறும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி உயரத்தில், தற்போது 23.50 அடி உயரம் வரை நீர் நிறைந்துள்ளது. தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், பூண்டி ஏரியில் இருந்து நீர்வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு நிலவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏரி நிறைந்திருப்பதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post வாட்டும் வெயிலிலும் முழு கொள்ளளவு எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி appeared first on Dinakaran.
