மழை வெள்ள பாதிப்புகளுக்கான பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டை மீண்டும் வஞ்சித்துள்ளது ஒன்றிய அரசு

சென்னை: மழை வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டுக்கு இந்த முறையும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மழை வெள்ள பாதிப்புகளுக்கான பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டை மீண்டும் ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. ஆந்திரா ரூ.608 கோடி, நாகாலாந்து ரூ.171 கோடி, ஒடிசா ரூ.255 கோடி, தெலங்கானா ரூ.232 கோடி, திரிபுரா ரூ.289 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு ஒன்றிய அரசு ரூ.37,906 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி கோரியிருந்தது.

The post மழை வெள்ள பாதிப்புகளுக்கான பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டை மீண்டும் வஞ்சித்துள்ளது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: