சீமான் மீதான வழக்கு மார்ச் 26க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு..!!

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு மார்ச் 26ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து விக்கிரவாண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வன்முறையை தூண்டியதாக குற்றச்சாட்டியுள்ளது. சீமான் மீது குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post சீமான் மீதான வழக்கு மார்ச் 26க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: