இவ்வரசாணையில் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் / ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் / முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறலாம்.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முன்னாள் ராணுவ வீரர்களின் விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகின்றன. https://www.exwel.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் பயன் பெற முன்னாள் ராணுவ வீரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு! appeared first on Dinakaran.
