புதுடெல்லி: மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதியோர் சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே சுகாதார மேம்பாட்டிற்கான கூட்டுறவு முயற்சிகளை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கும் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் பேசுகையில், முதியோர் சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆகியவை சிறப்பு கவனம் தேவைப்படும் முக்கியமான விஷயங்களாகும் என்றார்.
The post மூத்த குடிமக்களின் நல்வாழ்வு: ஆயுஷ், சமூக நீதித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.