சின்னமனூரில் 1.2 டன் ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

 

சின்னமனூர், பிப். 12: சின்னமனூர் மார்க்கையன் கோட்டை ரவுண்டான பிரிவு வழியாக, வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்திச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சார்பு ஆய்வாளர் லதா மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, உத்தமபாளையம் அருகே வயல்பட்டியைச் சேர்ந்த வினித் குமார்(30) என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், 1.2 டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்து உத்தமபாளையம் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அலகில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post சின்னமனூரில் 1.2 டன் ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: